தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜயின் தந்தை எஸ்.ஸ்.சந்திரசேகர் மீண்டும் புதிதாக கட்சி தொடங்கவுயுள்ளார் என்னும் தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய் பெயரில் கட்சி தொடங்கிய இவர் தற்போது புதிய கட்சி தொடங்க போவதாக கூறப்படுகிறது.
எஸ்.ஏ.சந்திரசேகர்:
தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மார்ச் மாதங்களில் சட்டசபை தேர்தல் தொடங்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. தற்போது அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களது பிரச்சார வேலைகளை துவக்கி தீவிரமாக அதற்காக செயல்பட்டு வருகின்றனர். வரும் தேர்தலுக்குள் அரசியலில் பல பரபரப்பான செய்திகள் வெளியாகும் என்றே தெரிகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழ் சினிமாவில் முன்னணி திரைப்பட இயக்குனரும், தளபதி விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், முந்தய காலங்களில் திரைப்படம் பல இயக்கியுள்ளார். மேலும் விஜயின் சினிமா பயணத்திற்கு தக்க உறுதுணையாக இருந்து வந்துள்ளார். தற்போது சில தினங்களுக்கு முன்பு எஸ்.ஏ.சந்திரசேகர் செய்த செயல் பராபரப்பு ஏற்படுத்தியது. தனது மகன் விஜயின் பெயரில் ஓர் அரசியல் கட்சியை துவக்கினார். ‘அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்’ என்னும் பெயரில் கட்சியை பதிவு செய்தார். இது விஜய் ரசிகர்கள் சிலருக்கு மகிழ்ச்சியையும், சிலருக்கு அதிர்வையும் தந்துள்ளது. மேலும் அவர் தனது கட்சிக்கான நிர்வாகிகள் அனைவரையும் தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சையது முஸ்தாக் அலி டி-20 இல் களமிறங்கும் அர்ஜுன் டெண்டுல்கர் – குவியும் வாழ்த்துக்கள்!!
புதிய கட்சி!!
மேலும் இது குறித்து தளபதி விஜய் கூறியதாவது, கட்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என் ரசிகர்கள் யாரும் அதில் சேர வேண்டாம் என்றும், தனது புகைப்படங்களை கட்சிக்காக பயன்படுத்தினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார். அதன்பின்பு எஸ்.ஏ.சந்திரசேகர் அந்தக்கட்சியின் பணிகளில் இருந்து பின்வாங்கினார். மேலும் விஜயின் இந்த முடிவால் அவரது ரசிகர்கள் சிலர் சற்று ஏமாற்றம் அடைந்தனர். மேலும் தற்போது ஏமாற்றமடைந்த ரசிகர்களுடன் ஆலோசனை செய்த எஸ்.ஏ.சந்திரசேகர் புதிய கட்சி தொடங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘அப்பா எஸ்.ஏ.சி மக்கள் இயக்கம்’ என்னும் பெயரில் கட்சி தொடங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கட்சிக்கான மாநில மற்றும் மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த கட்சிக்கான முழு விவரங்களும் வரும் பொங்கல் அன்று அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.