கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அவர்களின் உடல்நிலை மோசமடைந்து உள்ளதாக வெளியான தகவலுக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
அமைச்சர்களுக்கு கொரோனா:
தமிழகத்தில் ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது. இதுவரை உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன், மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள அமைச்சர் அன்பழகன் அவர்களின் உடல்நிலை மோசமடைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
இதற்கு விளக்கம் அளித்த மருத்துவமனை நிர்வாகம், அமைச்சர் உடல்நிலை மோசமடைந்ததாக வெளியான செய்தி பொய்யானது எனவும் அவரின் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதாக தெரிவித்துள்ளது. இது போன்ற தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம் அமைச்சர் அவர்கள் தொடர்ந்து செல்போன் வாயிலாக துறை ரீதியான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளது.