கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் போலியாக எஸ்.பி.ஐ வங்கி நடத்தி வந்த நபர் கைது செய்ததுடன் ஆவணங்கள், முத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலியான பெயரில் எஸ்.பி.ஐ வங்கி..!
பண்ருட்டி எல்.என்.புரம் ஸ்டேட் பேங்க் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஊழியரான சையது கலீல் இவரது மகன் கமால்பாபு என்பவர் ‘எஸ்.பி.ஐ., நார்த் பஜார் ‘ என்ற பெயரில் போலியான சலான், வரைவோலை, காசோலை, முத்திரைகள், ஆவணங்கள் உள்ளிட்டவை தயாரித்து வந்துள்ளார். இவர் தன்னை வங்கியின் மேலாளர் என்றும் கூறிக்கொண்டு வங்கி பெயரில் இணையதளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
இது தொடர்பாக பண்ருட்டி ஸ்டேட் வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் கமால்பாபு, ஈஸ்வரி ரப்பர் ஸ்டாம்ப் உரிமையாளர் மற்றும் அருணா பிரின்டர்ஸ் உரிமையாளர் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எந்த மாதிரியான மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து போலீசார்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.