நடிகை அதிதி ராவ் சினிமாவுக்கு வந்த புதிதில் வாரிசு தயாரிப்பாளர் ஒருவர் அவரை படுக்கை அறைக்கு அழைத்ததாக கூறியுள்ளார்.
அதிதி ராவ்..!
தற்போது தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அதிதி ராவ் சமீபத்தில் இவரது நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த சோபியும் சுஜாதாவும் படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
அதிதி ராவ் சினிமாவுக்கு வந்த புதிதில் வாரிசு கலாச்சாரம் அதிகமாக இருந்ததாகவும் நடிகர்களில் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர்கள் தரப்பிலும் அந்த கஷ்டத்தை அனுபவித்ததாக தெரிவித்துள்ளார். அந்த வாரிசு தயாரிப்பாளர் ஒருவர் தனக்கு சினிமாவில் வாய்ப்பு தர இரண்டு சாய்ஸ் தான் கொடுத்தாராம்.
என்னை குண்டு பூசணிக்காய் என்று கிண்டல் செய்வார்கள் – சாக்க்ஷியின் போட்டோ வைரல்..!
அதில் ஒன்று படுக்கையைப் பகிர்ந்துகொண்டு சினிமாவில் நடிக்க வேண்டியது, மற்றொன்று சினிமா கனவை மறந்து விட வேண்டியது என்பது தான். நான் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை எனவும் பின்னர் கஷ்டப்பட்டு வேறு ஒரு படத்தின் மூலம் அறிமுகம் ஆகிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவர் தயாரிப்பாளரின் பெயரை குறிப்பிடவில்லை.