சன் பியூட்டி ஸ்பா என்ற பெயரில் திருச்சியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்யும் வழக்கில் டிக் டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தி திருச்சி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்:
சீன செயலியான டிக்டாக்கை மத்திய அரசு தடை செய்துள்ளது. பலரின் குடும்பத்தை கெடுத்த டிக்டாக்கில் பலரும் பிரபலமாகியுள்ளனர். அதில் ஒருவர் தான் திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் அடுத்த அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி என்ற சூர்யா, டிக்டாக்கில் தன்னை ரவுடி பேபி சூர்யா என பெருமையாக சொல்லிக்கொண்டு கெட்ட கெட்ட வார்த்தைகளால் பேசியும், அரைகுறை ஆடைகள் அணிந்தும் வீடியோ பதிவிட்டுள்ளார். தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று கன்டென்ட் இல்லையென்றால் இவருடைய செய்தியை போடும் அளவிக்கிற்கு பிரபலமானவர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கொரோனா காலகட்டத்தில் அனைவரும் நோய் பயத்தில் இருந்த காலத்தில் கூட சிங்கப்பூர் சென்று வந்து அரசு உத்தரவின்படி 14 நாட்கள் அரசு முகாமில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியதற்கு போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிரபலமானவர்.
டிக் டாக் தடை செய்தபின் யூடூப்பில் வீடியோ போட ஆரம்பித்தார். சமூக வலைத்தளங்களை திறந்தாலே நான்தான் பெரியவள், நீ தான் பெரியவள் என ஒருவரை ஒருவர் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொள்வர். அவ்வாறு பிரபலமான சூர்யா தற்போது பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ரா மர்ம மரணம் – இன்று உடற்கூறாய்வு, சக நடிகர்களிடம் விசாரணை!!
திருச்சியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின்படி, திருச்சி தில்லை நகர், உறையூர், கே.கே.நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஸ்பாக்களில் விபசாரத் தடுப்புப் பிரிவு போலீசார் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது டிக் டாக் பிரபலம் சூர்யா உட்பட 10 பெண்களை விபச்சார வழக்கில் போலீஸார் கைது செய்தனர்.தான் பாலியல் தொழிலில் ஈடுபடவில்லை. இந்த மையத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று ரவுடி பேபி சூர்யா மறுப்பு தெரிவித்து வருகிறார்.
இருப்பினும், கைது செய்யப்பட்டவர்களுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சியில் முன்னதாக விபரச்சார வழக்கில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 20-க்கு மேற்பட்டோர் காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.