ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி மோதியது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோஹித் சர்மா 56 மற்றும் சுப்மன் கில் 58 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். இதையடுத்து, விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் களமிறங்கிய நிலையில் மழை பெய்ய தொடங்கியது. மழை இடைவிடாது பெய்ததால், நேற்று நிறுத்தப்பட்ட இந்திய அணியின் 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் என்ற ஸ்கோருடன் இன்று போட்டி மீண்டும் தொடங்க உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த போட்டியில், அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்த கேப்டன் ரோஹித் சர்மா சில சாதனைகளையும் படைத்து அசத்தி உள்ளார். அதாவது, நேற்றைய போட்டி மூலம் ஒருநாள் அரங்கில் 50 அரைசதங்களை பூர்த்தி செய்து அதிக அரைசதம் அடித்த இந்திய வீரர்களில் 8 வது இடத்தை பிடித்துள்ளார். மேலும், ஒருநாள் வடிவில் ரோஹித் 10 ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்ய இன்னும் 22 ரன்கள் மட்டுமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, இவர் ஒருநாள் அரங்கில் மட்டும் 240 இன்னிங்ஸில் 3 இரட்டை சதம், 30 சதங்கள், 50 அரைசதங்கள் என 9978 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பை 2023: மீண்டும் இன்று இந்தியா vs பாகிஸ்தான் மோதல்…, மழைக்கு வாய்ப்பு இருக்கா??