விஜய் டிவியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை. சீரியல் ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே டிஆர்பி ரேட்டிங்கும் எகிறி விட்டது. இப்பொழுது முத்துவும் மீனாவும் ஒன்று சேர ஆரம்பித்து விட்டனர். மீனா இல்லாமல் முத்துவால் இருக்க முடிவில்லை என்ற நிலைமை வந்து விட்டது. அதுமட்டுமின்றி ரோகினிக்கும் முத்துவுக்கும் அடிக்கடி பிரச்சனைகள் வந்து கொண்டே தான் உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி இருக்க இப்பொழுது ரோகினி மாட்டிக்கொள்ளும் சூழ்நிலை வந்துவிட்டது. அதாவது ரோகினியின் அம்மாவை முத்துவும், மீனாவும் தான் காப்பாற்றுகின்றனர். மீனாவிற்கு அவர் மீது ஏதோ சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது. மேலும், க்ரிஷ் வேறு வீட்டில் தங்கி உள்ளதால் எப்பொழுது என்ன ஆகுமோ என்ற பயத்திலேயே இருக்கிறார் ரோகினி. இப்பொழுது புதிய அப்டேட் ஒன்று லீக் ஆகி உள்ளது.
அதாவது, இன்னொரு தடவை ரோகினி அவரின் அம்மாவை பார்க்கும் சூழ்நிலை வருமாம். அப்பொழுது மீனா அதை பார்த்து விட சந்தேகித்து பின் தொடர்ந்து கண்டுபிடிப்பாராம். இனி வரும் எபிசோடுகள் இப்படி தான் நகருமாம்.