இந்திய அணியில் புதிய மாற்றங்களை கொண்டு வர BCCI நிர்வாகம் கடந்த 6 மாதகளாகவே ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை T20 போட்டிகளில் இருந்து நீக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது 2024 T20 உலக கோப்பை தொடர் தான். இத்தொடர் நடைபெற இன்னும் 6 மாதகள் உள்ள நிலையில் அதற்குள் இளம் இந்திய படையை உருவாக்க BCCI திட்டம் தீட்டுவதாக தெரிகிறது. அதற்காக தான் மூத்த வீரர்களை ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பயன்படுத்தும் முயற்சியில் BCCI நிர்வாகம் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2024: அணியின் வீரர் ஆலோசராக நியானம்…, வெளியான முக்கிய தகவல்!!