“இப்படி ஒரு சாதனையா?? எனக்கு இப்போ தான் தெரியும்”…, ரோஹித்தின் பளிச் பேட்டி!!

0
"இப்படி ஒரு சாதனையா?? எனக்கு இப்போ தான் தெரியும்"..., ரோஹித்தின் பளிச் பேட்டி!!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், தனித்துவமான சாதனை குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

ரோஹித் சர்மா:

வரலாற்று சிறப்புமிக்க பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று நாக்பூரில் நடந்து முடிந்தது. இந்த டெஸ்ட் போட்டியில், ஒர் இன்னிங்ஸில் மட்டுமே விளையாடிய இந்திய அணி, 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. இதன் மூலம், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த டெஸ்ட் போட்டியின் மூலம், இந்திய வீரர்கள் பலர், தனித்துவமான சாதனை படைத்துள்ளனர். இதில், இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவும், மூன்று வடிவ தொடரிலும் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமை படைத்திருந்தார். இந்த சாதனை குறித்து, ரோஹித் சர்மாவிடம் அஸ்வின் பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஒரே போட்டியில் அஸ்வின் படைத்த 3 மகத்தான சாதனைகள்…, முழு விவரம் இதோ!!

இது குறித்து பதிலளித்த ரோஹித் சர்மா, எப்படிப்பட்ட சாதனையை நான் படைத்தேன் என்று இப்போது தான் தெரிகிறது. ஆனால், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, ஜடேஜா குறித்து அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆல்ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டுள்ளார். இவர், பேட்டிங்கிலும் அடுத்த போட்டியில் சாதனை படைப்பார் என்று ரோஹித் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here