பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பிரபலமாக நடித்து வரும் ரித்திகா காமெடி ராஜா கலக்கல் ராணி செட்டில் பாலாவுடன் இணைந்து செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி ரித்திகா
ராஜா ராணி சீரியலில் ராஜீவுக்கு தங்கையாக நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் ரித்திகா. அதன் பிறகு தான் அவர் பாக்கியலட்சுமி சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போதே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
அவர் அதில் அனைத்து சுற்றிலும் பாலாவுடன் தான் இணைந்து சமைத்தார். ஆனால் 3 எபிசோடுகள் கூட அவர் தாக்குபிடிக்கவில்லை. தற்போது அவர் தான் எழிலுக்கு ஜோடியாக பாக்யலட்சுமியில் கலக்கி வருகிறார்.
மேலும் மக்கள் மத்தியிலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இவரையும் பாலாவையும் சேர்த்து வைத்து தான் அதிகம் ட்ரோல் செய்து வருகின்றனர். ரித்திகாவை பற்றி சொல்ல வேண்டுமென்றால் எப்பொழுதுமே ஒரு சாந்தமான முகம், யாரையும் எதிர்த்து பேசாத குணம் அதே நேரத்தில் நடிப்பு என்றால் பின்னி பெடலெடுத்து விடுவார்.
அந்த வகையில் தான் தற்போது அவர் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டுள்ளனர். அவர்கள் இருவரும் செய்யும் அட்டகாசங்களை பற்றி சொல்லவே வேண்டாம். இப்பொழுது ஷூட்டிங் செட்டில் ஒரு பந்தை வைத்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்