ஆள விடுங்கடா சாமி.., பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்த ரிஷப் பந்த்…, என்ன காரணம் தெரியுமா??

0
ஆள விடுங்கடா சாமி.., பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்த ரிஷப் பந்த்..., என்ன காரணம் தெரியுமா??
ஆள விடுங்கடா சாமி.., பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்த ரிஷப் பந்த்..., என்ன காரணம் தெரியுமா??

பங்களாதேஷிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தான் விலகுவதாக ரிஷப் பந்த் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரிஷப் பந்த்:

இந்திய அணி பங்களாதேஷிற்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியை நேற்று விளையாடியது. இந்த போட்டியில், இந்திய வீரர்கள் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்ட போதும், பேட்டிங்கில் நிலைத்து நின்று விளையாட தவறினர். இதனால், ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷிடம் இந்திய அணி தோல்வியை தழுவியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த பங்களாதேஷிற்கு எதிரான தொடரில், ரிஷப் பந்தின் ஆட்டத்தை வைத்து, இனி வரும் போட்டிகளில், அவருடைய இடம் குறித்து தெளிவான முடிவு எடுக்கலாம் என முன்னாள் வீரர்கள் பலர் கூறியிருந்தாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், ரிஷப் பந்தோ பங்களாதேஷிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தனக்கு விலக்கு அளிக்குமாறு பிசிசிஐயிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.

ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழந்த இந்தியா…, சொந்த மண்ணில் பதிலடி கொடுப்பார்களா??

இந்நிலையில், பிசிசிஐ, ரிஷப் பந்த் ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக மீண்டும் அணியில் இணைவார் என அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிஷப் பந்த் விலகியதற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. இவர், இல்லாத நிலையில் தான், நேற்று நடைபெற்ற போட்டியில், கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக களமிறங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here