தமிழகத்தை மிரட்ட வரும் “மாண்ட்ஸ்” புயல் – டிச. 8 முதல் மிக கன மழை! எந்தெந்த மாவட்டம் தெரியுமா?

0
தமிழகத்தை மிரட்ட வரும்
தமிழகத்தை மிரட்ட வரும் "மாண்ட்ஸ்" புயல் - டிச. 8 முதல் மிக கன மழை! எந்தெந்த மாவட்டம் தெரியுமா?

அந்தமான் பகுதியில் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு நிலை மீண்டும் வலுப்பெற்று வங்கக்கடலில் புயலாக மாற இருப்பதாக, வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்:

கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்தது. அதை தொடர்ந்து வங்கக்கடலில் அந்தமான் கடலோரங்களில் உருவான காற்றழுத்த தாழ்வு வலுவிழந்த நிலையில் சென்றதால் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்ததுடன் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

நேற்று தென்சீனக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதியில் இருந்து மெல்லிய காற்று அந்தமான் பகுதியில் இருந்த வலுவிழந்த காற்றுடன் இணைந்ததால் காலை முதல் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும், வட இலங்கை பகுதியிலும் கன மழையும் சில இடங்களில் மிதமான மழையும் விட்டு விட்டு பெய்துள்ளது. தற்போது மையம் கொண்டுள்ள இந்த மெல்லிய காற்று கடலோர பகுதியில் உள்ள காற்றினை உள்வாங்குவதால் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்க இருக்கிறது. இதனால் வங்கக் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சீக்ரெட்டாக நடந்த தளபதி 67 பட பூஜை.., லோகேஷ் என்ன இது? முதல் நாளே இப்படியா பண்ணுவீங்க?

மேலும்,காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 8 ல் வங்கக்கடலில் புயலாக உருவெடுக்கும் பட்சத்தில் புயலுக்கு “மாண்ட்ஸ்” என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் மதுரை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, தூத்துக்குடி போன்ற பகுதி மாவட்டங்களில் கனமழை பெய்யும். இந்த புயல் வலுவிழந்த நிலையில் தரைப்பகுதியில் கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற வட மாவட்டங்கள் வழியாக வலுவிழக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here