2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் டெல்லி அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஓர் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சமீபத்தில் வெளியான ICC விதிமுறையின்படி, ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக இப்போட்டியில் டெல்லி அணிக்கு பைன் போடப்பட்டுள்ளது.
அதாவது கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசிய காரணத்திற்காக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்க்கு 24 லட்சமும் மற்ற வீரர்களுக்கு 25% சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. பண்ட்க்கு அபராதம் விதிப்பது இது 2வது முறை. இதற்கு முன் CSK அணிக்கு எதிரான போட்டியில் 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஐசிசி விதிமுறைகளின்படி, ஒரு ஓவர் குறைவாக வீசினாலே 20% அபராதம் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.