நடப்பு வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்ற ரிங்கு சிங் தன்னை ஒரு பினிஷராக நிலை நிறுத்தி கொண்டு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதன் மூலம், சர்வதேச இந்திய அணியில் ரிங்கு சிங் விரைவில் இடம் பிடிப்பார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரையிலும் இவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில், லிஸ்ட் A தியோதர் டிராபியில் கவனம் செலுத்தி வரும் இவர் மத்திய மண்டல கிரிக்கெட் அணிக்காக தனது பங்களிப்பை அளித்து வருகிறார். 6வது பேட்ஸ்மேனாக களமிறங்கி அசத்தும் இவர், சமீபத்திய நாட்களில் (38, 6, 48, 40, 54) ரன்கள் எடுக்க தடுமாறுகிறார். பிசிசிஐ இவர் மீது தனி கவனம் செலுத்தும் பட்சத்தில், இந்திய அணிக்கு அடித்தளம் (யஷஸ்வி ஜெய்ஸ்வால்) கிடைத்தது போல பினிஷசிங்கும் சரியானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.