தமிழக மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும் இம்மாதம் 19ஆம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதால் இதில் மக்களுக்கு சாதகமாக பல அறிவிப்புகள் வெளியாகலாம் என நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் அதற்கு மாறாக இப்போது அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதாவது கடந்த சில நாட்களாக அரிசி விலை உயர்ந்து கொண்டே உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் தற்போது மீண்டும் அரிசி விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது குறைவான சாகுபடி, நீர்வரத்து குறைவு போன்ற காரணங்களால் மகசூல் மிகவும் பாதிக்கப்பட்டதால் நெல் விலை கிலோவுக்கு ஆறு ரூபாய் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக இப்போது அரிசி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி கர்நாடகா பொன்னி, ஆந்திரா பொன்னி உள்ளிட்ட அனைத்து ரக அரிசிகளும் கிலோவுக்கு 12 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
IPL 2024: ராஞ்சியில் பயிற்சியை தொடங்கி தோனி.. வைரலாகும் புகைப்படம் உள்ளே!!