இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ள ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் வரும் மார்ச் 24ம் தேதி முதல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் அனைத்து அணிகளின் நோக்கமும், சாம்பியன் பட்டத்தை வெல்வதாகவே இருக்கும். எதிர்வரும் இத்தொடரில், சென்னை (CSK), பெங்களூரு (RCB), மும்பை (MI) உள்ளிட்ட 10 அணிகள் பங்கு பெற உள்ளன.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதில், இதுவரை நடைபெற்றுள்ள 16 சீசன்களில், 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றதுடன் , எதிரணிகளுக்கு அதிக நெருக்கடி கொடுக்க கூடிய அணியாக சென்னை அணி திகழ்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (பிப்ரவரி 6) ராஞ்சியில் பயிற்சியை தொடங்கினார் மகேந்திர சிங் தோனி. எனவே அவர் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது சிறப்புக்குரியது.
TNPSC தேர்வர்களே., “குரூப் 1” தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி? முழு விவரம் உள்ளே!!