நாடு முழுவதும் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி அறிவித்து வருகிறது. இந்த அறிவிப்புகளை பின்பற்றாத வங்கி மீது கடும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெங்களூரில் அமைந்துள்ள தேசிய கூட்டுறவு வங்கி, தங்களது வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்கில் வரம்பு மீறி அபராத தொகை வசூல் செய்ததால்,அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக RBI அண்மையில் அறிவித்து இருந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
தற்போது இந்த வங்கியின் வணிகம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைந்ததால், வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ.50,000 வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பலரும் தங்களது பணத்துக்கு ஆபத்து வந்துவிடுமோ? என அச்சத்தில் உள்ளனர்.