சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகை ரூ.6000 வழங்க இருப்பதாக தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். இதை தொடர்ந்து இதற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு நிவாரண உதவி தொகை கிடைக்குமா?? என கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதற்கு பதில் அளித்த அவர் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை நடத்தி வருகிறது. இதனால் இது குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இதை வைத்துப் பார்க்கும்போது ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
2023ம் ஆண்டிற்கான சிறந்த உணவு வகை பட்டியல்.., இந்தியாவுக்கு இடம் பிடித்ததா? வெளியான முக்கிய தகவல்!!