தமிழகத்தில் ரெட் அலர்ட் – மீனவர்களே எச்சரிக்கை!!

0

காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது உருவாகியுள்ளதன் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு அரபிக்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாளவுப்பகுதி உருவாகும் என்று வானிலை மையம் தெர்வித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது உருவாகியுள்ளது, இதன் காரணமாக நாளை முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை தொடர்ந்து வருகிற மே 15ம் தேதி அன்று தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 14ம் தேதியை பொறுத்தவரை தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னல் சூறைக்காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் ஊரடங்கு நடவடிக்கையை கடுமையாக்க வேண்டும் – தொடர்ந்து எழும் கோரிக்கைகள்!!

தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து புயலாக மாறவுள்ளதால் அந்த புயலுக்கு TAUKTEA என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள குறிப்பிட்டுள்ள 4 மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அரபிக்கடல் பகுதியில் 50 முதல் 60 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here