கடந்த சில மாதங்களாக இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தேசிய தலைநகர் டெல்லியில் கனத்த மழை கொட்டித் தீர்த்தது. அதே போல, கொல்கத்தா மற்றும் மகாராஷ்டிராவின் ஒரு சில பகுதிகளில் தற்போது மழை பெய்து கொண்டிருக்கிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த நிலையில், மீண்டுமாக மத்திய பிரதேச மாநிலத்திற்கு கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இம்மாநிலத்தில் நாளை (ஆகஸ்ட் 3) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே போல ஒடிசா மாநிலத்திற்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.