அரபிக்கடலில் இன்று (ஜூன் 2) உருவாகவுள்ள ‘நிசார்கா புயல்’ காரணமாக மஹாராஸ்டிரா, கோவா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
நிசார்கா புயல்:
அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகலுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அது பின்னர் வலுவடைந்து புயலாக மாறும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. நிசார்கா என பெயரிடப்பட்டு உள்ள இந்த புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (ஜூன் 3) பிற்பகல் மகாராஷ்டிராவின் ஹரிஹரேஸ்வர்-டாமன் இடையே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிசார்கா புயல் காரணமாக, மஹாராஷ்டிரா மாநிலத்தின் சில பகுதிகள் (மும்பை, பால்கர், தானே, ராய்காட்), கோவா மற்றும் குஜராத் உள்ளிட்ட மேற்கு இந்திய பகுதிகளில் மணிக்கு 115 கிமீ வேகத்தில் சூறைக்காற்றுடன் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதனால் மும்பைக்கு ரெட் அலெர்ட் விடப்பட்டு உள்ளது. புயல் காரணமாக மேற்குறிப்பிட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |