தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!! 

0
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!! 
சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பட இருக்கும் வானிலை மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (மே 27) முதல் மே 31ம் தேதி வரை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மே 28 முதல் மே 31 ஆம் தேதி வரை மேலே குறிப்பிட்ட பகுதிகளில் வறண்ட வானிலையை நிலவ கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரையில், வானம் ஓரளவுக்கு மேகமுட்டத்துடனே இருக்குமே தவிர அதிக பட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here