சில வாரங்களுக்கு மேலாக வட மாநிலங்களில் அதிகமாக பனி பொழிந்து வந்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருந்தது. இதுபோக சாலை போக்குவரத்து, விமான சேவை மிகுந்த பாதிப்பை கண்டு வந்தது. இப்படி இருக்கையில் மீண்டும் கடும் பனி மூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. அதாவது டெல்லி, ஹரியானா, சண்டிகர், உத்தரபிரதேசம், பீகார்,ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநில மக்களுக்கு கடும் பனி பொலிவுக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்குவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.