மத்திய பிரதேசத்தில் கிராமப்புற மக்களை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமூட்டும் வகையில் செல்போன் ரீச்சார்ஜ் கூப்பன், புத்தாடை உள்ளிட்ட பரிசு பொருட்களை அம்மாநில அரசு அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு மாநில அரசுகளும் மக்களை தடுப்பூசி செலுத்த ஊக்கப்படுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயங்கிய மக்கள் கூட அரசின் முயற்சியால் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
ஆனால் என்ன தான் அரசு முயற்சித்தாலும் சில கிராம புறங்களில் தடுப்பூசி பற்றிய தவறான புரிதலே நிலவி வருகிறது. அரசு மக்கள் நன்மைக்காகவே தடுப்பூசி செலுத்த வற்புறுத்துகிறது என்பது அம்மக்களுக்கு புரியவில்லை. எனவே இவ்வாறான மக்களையும் தடுப்பூசி செலுத்தவைக்க மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அரசு அதிகாரிகள் ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.
அதாவது கொரோனா தடுப்பூசி செலுத்த வரும் மக்களுக்கு பரிசு பொருள்கள் கொடுத்து தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிப்பதே அந்த திட்டம். எனவே ரீச்சார்ஜ் கூப்பன், புத்தாடை உள்ளிட்ட பரிசு பொருட்களை அம்மாநில அரசு அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட பின்னர் அந்த கிராம மக்கள் தடுப்பூசி போட வந்த வண்ணம் உள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்