நாம் இருவர் நமக்கிருவர் சீரியலில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி தற்போது சில வாரங்களிலேயே கடைசி இடத்தில் இருந்த சீரியல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நாம் இருவர் நமக்கிருவர்
இந்த சீரியலில் ஆரம்பித்த காலத்தில் மாயன் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பிரபலமானது. இரட்டை வேடத்தில் செந்தில் இதில் நடிக்க இரண்டு கதாநாயகிகளுடன் கலக்கி வந்தார். அதன் பிறகு லாக்டவுன் போடப்பட்டதால் சீரியல் இடையில் நிறுத்தப்பட்டது. இப்படி இருக்க இந்த சீரியல் மீண்டும் புதிய அத்தியாயத்தில் தொடங்கப்பட்டது. ரக்சிதா இந்த சீரியலில் இணைந்துள்ளார்.
மேலும் பல பிரச்சனைகளை தாண்டி மாயனும் மகாவும் இப்பொழுது தான் ஒன்று சேர்ந்துள்ள நிலையில் மீண்டும் முத்தரசனால் மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது. முத்தரசனை கொன்றது யார்??என்ற கேள்வி அனைவர்க்கும் குழப்பமாக உள்ளது. இதனால் இந்த சீரியலை காண அனைவரும் ஆர்வம் காட்டி வந்தனர்.
இந்நிலையில் தான் முத்தரசனை சுட்டு கொன்ற எபிசோடு வேற லெவெலில் டிஆர்பியில் எகிறியுள்ளது. இதனால் அந்த சீரியலுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். முதல் இடத்தில் பாரதி கண்ணம்மாவும் அடுத்த இடத்தில் பாக்கியலட்சுமி இருக்க மூன்றாவது இடத்தை நாம் இருவர் நமக்கிருவர் சீரியல் பெற்றுள்ளது.