கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட கல்வி நிலையங்கள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் மார்ச் 1ம் தேதி முதல் தங்களது நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
உலகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து தற்போது கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. தங்களது நாடுகளின் சூழ்நிலைகளுக்கேற்ப பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து அந்நாடுகளின் அரசுகள் முடிவுகள் எடுத்து வருகின்றன.
சாத்தூரை தொடர்ந்து சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்து – 5 பேர் பரிதாப பலி!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் “கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால் , இனி வழக்கம் போல பள்ளிகள் செயல்படும் “என்றும், “மார்ச் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்” என்றும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் விதி முறைகளும் பின்பற்றப்பட்டு பள்ளிகள் செயல்படும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.