சாத்தூரில் நடந்த பட்டாசு ஆளை வெடி விபத்தில் 21 பேர் இறந்த நிலையில் சிவகாசியில் தற்போதும் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பலரும் சோகமடைந்துள்ளனர்.
பட்டாசு ஆலை:
விருதுநகர் மாவட்டதிலுள்ள சிவகாசி அருகே காளையர்குறிச்சியில் அமைந்துள்ள ஒரு பட்டாசு ஆலையில் தற்போது பயங்கரமான வெடி விபத்து ஒன்று நடந்துள்ளது. ஆலையிலிருந்த 10க்கும் மேற்பட்ட அறைகள் தரை மட்டமானதாக கூறப்படும் நிலையில் பலரும் காயமடைந்துள்ளனர்.
அரசு கேட்கும் தகவல்களை தரமறுத்தால் 5 ஆண்டு சிறை தண்டனை – வலைதள கட்டுப்பாடுகள் வெளியீடு!!
நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் தீயினை அணைத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர். இந்த விபத்தால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அரசு மேற்கொள்ள வலியுறுத்தும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒழுங்காக கடைபிடிக்காததே இது போன்ற விபத்துகள் நடக்க காரணம் ஆகிறது. மிக சிறிய அறையில் அதிக அளவு வெடிமருந்துகளை அடைத்து வைப்பதும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்வதும் விபத்தின் போது தப்பிக்க வழியில்லாமல் செய்து விடுகிறது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.