மருத்துவ கலந்தாய்வில் போலி சான்றிதழ்களை அளித்து மோசடி செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவி தீக்க்ஷா பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான அவரையும் அவரது தந்தையையும் போலீசார் தேடிவந்த நிலையில் தந்தை பாலச்சந்திரனை கடந்த 1ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
போலி சான்றிதழ்கள்:
மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்ட ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவி தீக்க்ஷா, குறைவான மதிப்பெண்கள் எடுத்த தனது நீட் சான்றிதழ்களை அதிக மதிப்பெண் எடுத்தது போல மாற்றி கொடுத்து ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டு சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் மருத்துவ கல்வி இயக்ககம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தலைமறைவான அவரையும், அவரது தந்தையும் பல் மருத்துவருமான பாலச்சந்திரனையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது – உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு!!
தொடர் தேடுதலுக்கு பிறகு மருத்துவர் பாலச்சந்திரன் கடந்த 1ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்தன. தற்போது பெங்களூருவில் பதுங்கியிருந்த தீக்க்ஷாவை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். இந்த மோசடிக்கு உடந்தையாக ஜெராக்ஸ் கடை உரிமையாளரையும் போலீசார் தேடிவருகின்றனர்.