பிப்ரவரி 24 முதல் வேட்பாளர்கள் மனுக்களை அளிக்கலாம்- அதிமுக அறிவிப்பு!!

0
admk
admk

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள் தங்களது மனுக்களை அளிப்பதற்கான கால அவகாசத்தினை தற்போது அதிமுக அறிவித்துள்ளது. பிப்ரவரி 24 முதல் மனுக்களை வழங்கலாம் என கட்சி மேலிடம் அந்த அறிவிப்பில் கூறியுள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது வேட்பாளர்களுக்கான மனுக்களை அரசியல் கட்சிகள் பெற துவங்கியுள்ளன. மனுக்களை பெற்ற பின் தகுதியுள்ள வேட்பளர்கள் கட்சி தலைமையால் தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுதி வாரியாக அறிவிக்கப்படுவார்கள்.

கிடுகிடுவென உயரும் ‘கேஸ் சிலிண்டர் விலை’ – காரணம் இதுதான்!!

இதன்படி தற்போது அதிமுகவும் தனது கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்களது மனுக்களை அளிப்பதற்கு கால அவகாசத்தினை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் வரும் 24ம் தேதி முதல் மார்ச் மாதம் 5ம் தேதி, காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிக்குள் ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் வேட்பாளர்கள் தங்களது மனுக்களை வழங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here