இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளின் 65 ஆவது போட்டி இன்று ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் வைத்து நடத்தப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து, ஹைதராபாத் அணி சார்பில் கமிறங்கிய அபிஷேக் ஷர்மா (11), ராகுல் திரிபாதி (15), மார்க்ரம் (18), ஹெய்ன்ரிச் (104), ப்ரூக் (27), பிலிப்ஸ் (5) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
இதன் மூலம், ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. இப்போது, 187 ரன்களை இலக்காக வைத்து விளையாடிய பெங்களூரு அணி ஆரம்பத்தில் இருந்து அதிரடி காட்டியது. அந்த வகையில், விராட் கோலி 63 பந்துகளில் 100 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை குஷ்பூ….,வைரலாகும் புகைப்படங்கள்….,
அதே நேரத்தில், பிலிஸிஸ் 71 ரன்கள் எடுத்து அவுட் ஆக மேக்ஸ்வெல் (5), பிரேஸ்வெல் (4) ஆட்டத்தை முடித்து வைத்தனர். அதன்படி, பெங்களூரு அணி 19.2 ஓவர் முடிவில் 187 ரன்களை எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணியின் இந்த வெற்றியால் மற்ற அணிகள் பிளேஆப் போட்டிகளுக்கு செல்லும் வாய்ப்பு சிக்கலாகியுள்ளது.