எதிர்வரும் சீசனில் இருந்து RCB யின் டைட்டில் ஸ்பான்சராக பிரபல கத்தார் ஏர்வேஸை நிறுவனம் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
RCB
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ள ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் வரும் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த தொடரில் அனைத்து அணிகளின் நோக்கமும், சாம்பியன் பட்டத்தை வெல்வதாகவே இருக்கும். எதிர்வரும் இந்த ஐபிஎல் தொடரில், CSK, RCB, MI உள்ளிட்ட 10 அணிகள் பங்கு பெற உள்ளன.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதில், இதுவரை நடைபெற்றுள்ள 15 சீசன்களில், ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்லாமல் இருந்தாலும், எதிரணிகளுக்கு அதிக நெருக்கடி கொடுக்க கூடிய அணியாக RCB அணி திகழ்கிறது. இந்த முறையாவது, நெருக்கடி தருவதுடன், சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேம் சைட் கோலால் வந்த வினை…, பார்சிலோனோ அணியிடம் வீழ்ந்த ரியல் மாட்ரிட்!!
இந்நிலையில், கத்தார் ஏர்வேஸை நிறுவனமானது, RCB அணிக்கு எதிர்வரும் சீசனில் இருந்து டைட்டில் ஸ்பான்சராக ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரூபாய் 75 கோடிக்கு செய்யப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் 3 வருடத்திற்கு இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.