தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் அதிதீவிரமாக பரவி வருவதாகவும், மக்கள் இது குறித்து பீதி அடைய வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
சுகாதாரத்துறை :
கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக, கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டி படைத்து வருகிறது. இந்த வைரஸ் போக, ஒரு சில சீசன் சார்ந்த நோய்களும் மக்களை சில நேரம் பீதியில் ஆழ்த்துகிறது. அந்த வகையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் ஒன்று அதி தீவிரமாக பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
காய்ச்சல், உடல் சோர்வு போன்ற உபாதைகளால் மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பேசிய தமிழக சுகாதாரத்துறை, காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளதாக தெரிவித்தது.
whatsapp பயனர்களே உஷார்., மறந்தும் இதை Statusல வச்சுடாதீங்க! மீறினால் அப்புறம் அம்போ தான்!!
அதுமட்டுமில்லாமல் போதிய மருத்துவ வசதி மற்றும் மருந்து பொருட்கள் இருப்பதால் பொதுமக்கள் இதுகுறித்து அச்சமடைய வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இருந்தாலும், இந்த வைரஸ் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.