இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இன்று (டிசம்பர் 26) முதல் ஜனவரி 7ம் தேதி வரை நடக்கவுள்ளன. இந்த நிலையில் இத்தொடரின் மூலம் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் படைக்க போகும் சாதனை குறித்து காணலாம்.
அதாவது அஸ்வின் இந்த தொடரில் 11 விக்கெட்டுகளை கைப்பற்றினால் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். இச்சாதனையை இவர் நிகழ்த்தும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500+ விக்கெட்டுகளை வீழ்த்திய ஒன்பதாவது பவுலர் என்ற சாதனையை அஸ்வின் படைப்பார். இந்நிலையில் எதிர்வரும் தொடர்களில் இதே பார்மை தொடர்வார் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.