தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்ட மக்களுக்கு நிவாரண தொகையாக ரூ. 6000 வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். இதையடுத்து, நிவாரணத் தொகை பெறுவதற்கான தேதி, நேரம் ஆகியவை குறிப்பிட்டு டோக்கன்களும் விநியோகம் செய்யப்பட்டன. ஆனால், சென்னை மணலியை அடுத்த மாத்தூரில் டோக்கன்கள் இருந்தும் நிவாரணத் தொகை மக்களுக்கு கிடைக்கவில்லை. அதாவது, ஞாயிற்றுக்கிழமை நிவாரணத் தொகை பெற வந்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக ரேஷன் கடைகள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றியும் மூடப்பட்டிருந்துள்ளது.
![](https://enewz.in/wp-content/uploads/2023/12/1st-mka.jpg)
Enewz Tamil WhatsApp Channel
IND vs SA டெஸ்ட் தொடர்: வரலாற்று சாதனையை நோக்கி அஸ்வின்.. வெளியான முக்கிய தகவல்!!