அண்மையில் திருமணம் செய்து கொண்ட ரவீந்தர், தனது மனைவி மகாலட்சுமி செயலால் ஆதங்கத்தில் குமுறிய படி ஒரு இன்ஸ்டா பதிவை வெளியிட்டுள்ளார்.
இன்ஸ்டா பதிவு :
சீரியல் நடிகை மகாலட்சுமியை, பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் காதலித்து கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இது குறித்த புகைப்படங்கள், சோசியல் மீடியாவில் வெளியாகியது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள், தனக்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத ரவீந்தரை மகாலட்சுமி பணத்திற்காக திருமணம் செய்து கொண்டார் என வசைபாடினர்.
ஆனால், இருவரும்,புரிந்து கொண்டு திருமணம் செய்து கொண்டதாக தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், ரவீந்தர் தன் இன்ஸ்டா பக்கத்தில் முக்கிய பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதாவது, ஞாயிற்றுக்கிழமை எல்லாருக்கும் லீவு, ஆனால் எனக்கு துரதிஷ்டவசமாக வேறு மாதிரி உள்ளது. ஷூட்டிங் என கூறி மகா காலையில் சென்றுவிட்டார்.
மதிய உணவை என்னை எடுத்து வர சொல்லி இருக்கிறார். அவருக்காக டன்ஸோபாயாக மாறி, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு உணவு கொண்டு வந்துள்ளேன் என காமெடியாக பதிவிட்டுள்ளார். மேலும் இந்த உணவை சமைத்துக் கொடுத்த அம்மாவுக்கு நன்றி, மறக்காமல் பாத்திரங்களை திரும்ப கொண்டு வரவும் என அதில் குறிப்பிட்டுள்ளார்
View this post on Instagram