தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டம் – வினோத போராட்டத்தை அறிவித்த ஊழியர்கள்! அரசுக்கு நெருக்கடி!!

0
தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டம் - வினோத போராட்டத்தை அறிவித்த ஊழியர்கள்! அரசுக்கு நெருக்கடி!!

தமிழகத்தில் மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதற்காக அரசு ஊழியர்களின் போராட்ட குழு வினோத போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

வினோத போராட்டம் :

தமிழகத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள், கடந்த சில மாதங்களாக போராடி வருகின்றனர். தற்போதைய பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டம் மூலம் ஊழியர்களுக்கான ஒப்படைப்பு ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதற்காக ஏற்கனவே உண்ணாவிரதம், கண்டன ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தற்போது, முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 22ஆம் தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப்படும் என, அரசு ஊழியர்களின் கூட்டுப் போராட்ட குழு அறிவித்துள்ளது.

இந்தப் போராட்டத்தில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் எனவும் ஊழியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதனால் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here