ரேஷன் கடைகளில் நாளை முதல் கைவிரல் ரேகைப் பதிவு முறையில் ரேஷன் பொருட்கள் விநியோகிப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இம்முறை தற்போது மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தொற்றின் விளைவாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மாநில மக்களுக்கு தமிழக அரசு கொரோனா நிவாரண தொகை ரூ.4000 ஐ இரண்டு தவணையாக வழங்கி வருகிறது. அதனுடன் 14 வகை மளிகைப்பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் ஒரே நேரத்தில் ரேஷன் கடை முன்பு கூடுவதை தவிர்க்கவும் நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவின்றி பொருட்கள் வழங்கப்பட்டது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது இம்மாத இறுதிக்குள் நிவாரண உதவித் தொகையும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் முழுவதுமாக விநியோகம் முடிக்கப்படும் நிலையில் உள்ளது”.
மேலும் அந்த அறிக்கையில், “நாளை (ஜூன், 1 2021) முதல் முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை, புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணியை மேற்கொள்வதற்கும் மற்றும் கைவிரல் ரேகைப் படிப்பினையும் மீள செயல்முறைப்படுத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது”. என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நாளை முதல் தமிழக ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகைப் பதிவு முறை நடைமுறைக்கு வரவுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்