தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்?? பொருட்கள் கிடைப்பதில் சிரமம்.., வெளியான அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடை ஊழியர்களும் பண்டிகை மற்றும் சிறப்பு நாட்களில் விடுமுறை இன்றி தொடர்ந்து மக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழக அரசு ரேஷன் கடை ஊழியர்கள் கூடுதல் பணிச்சுமையை மேற்கொண்டால் அவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் பல சலுகைகளும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியர்களும் பணியின் போது இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை, வேறு மாவட்டங்களுக்கு பணி மாறுதல் கேட்கும் பணி பணியாளர்களுக்கு இடம் மாறுதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் தமிழக அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திரன் ராஜா ஊழியர்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி வரும் மார்ச் 13ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவித்துள்ளனர். இதனால் ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here