தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வெளி மாநிலங்களை சேர்ந்த பலரும் தொழில் ரீதியாக குடும்பத்துடன் தங்கி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ரேஷன் அட்டை வேண்டி புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போர்ட்டலில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில், நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
தேசிய ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கு புதிய விதி., ஏப்ரல் 1 முதல் அமல்? முழு விவரம் உள்ளே…
அதாவது “அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமார் 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு இன்னும் 2 மாதங்களில், ரேஷன் கார்டுகளை மாநில அரசுகள் வழங்க வேண்டும்.” என உத்தரவிட்டு, ஜூலை 16 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.