கொரோனா காலத்தில் வருமானம் இல்லாமல் இருக்கும் மக்களின் நலன் கருதி “பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா” திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள ஏழை குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ கோதுமை மற்றும் 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாதனை படைத்த RCB… மும்பையை பின்னுக்கு தள்ளி அபாரம்!!
இத்திட்டம் தொடங்கும் போது 3 மாதங்களுக்கு மட்டுமே செயல்படும் என அறிவித்து இருந்த நிலையில், தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. அதன்படி தற்போது மத்திய அரசின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 2028 ஆம் ஆண்டு வரை இலவச ரேஷன் பெறலாம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதன்மூலம் சுமார் 81 கோடி மக்கள் பயனடைவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.