பொதுவாக மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுவதை செய்திகளில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இன்று கோவை ராமநாதபுரம் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளி ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. அதாவது கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து போலீசார் மிரட்டல் விட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி., இந்த சலுகை 2028 வரை கிடைக்கும்? மத்திய அரசு அறிவிப்பு!!!
மேலும் மிரட்டல் விடப்பட்டுள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் அழைப்பு விடுத்து மாணவர்களை அழைத்து செல்லும்படி அறிவித்துள்ளனர். கோவைக்கு இன்று (மார்ச் 18) மாலை பிரதமர் மோடி வரும் நிலையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.