கொரோனா காலத்தில் ஏழை எளியோர்கள் பயன்பெறும் வகையில் இலவச ரேஷன் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த இலவச வசதி வருகிற டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறுத்தப்பட உள்ள நிலையில், கூடுதலாக சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இலவச ரேஷன் வசதியை வசதி படைத்த லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இதையடுத்து வருமான வரி செலுத்துபவர்கள், 10 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் என தகுதியற்றவர்களை வகைப்படுத்தி உள்ளனர். இவர்களை கண்டறிந்து இலவச ரேஷன் வசதியை, அவர்களுக்கு ரத்து செய்ய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
தாறுமாறாக உயரும் சின்ன வெங்காயத்தின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவா?? முழு விவரம் உள்ளே!!