பீகார் மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த மந்திரகவாதி ஒருவர், தன்னை கனவில் வந்து அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்வதாக பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பிஹார் காந்தி மைடனில் உள்ள காவல் நிலையத்தில் பெண் ஒருவர் வித்தியாசமான புகார் ஒன்றை அளித்துள்ளார். இதை கேட்டு போலீசாரே ஒரு நிமிடம் குழம்பியுள்ளனர். அது என்ன புகார் என்றால், மாந்திரிகவாதி ஒருவர் கனவில் வந்து பலாத்காரம் செய்வதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணின் மகன் திடிரென்று உடல்நல குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் மகனை குணப்படுத்த அருகில் இருந்த கோவிலில் உள்ள ஒரு மாந்திரீகவாதியை அப்பெண் நாடியுள்ளார். பின்னர் அப்பெண் எடுத்த முயற்சிகள் பலன் இன்றி 15 நாட்களில் அவர் மகன் உயிரிழந்துள்ளார்.
அவர் மகன் இறந்த பின்பு தொடர்ந்து அந்த மாந்திரீகவாதி தன்னை கனவில் பாலியல் பலாத்காரம் செய்வதாக ஒரு வினோத புகாரை அளித்துள்ளார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்