தன் அப்பா என்றே தெரியாமல் பாரதியின் கண்ணீரை துடைக்கும் லட்சுமி – கண்கலங்க வைத்த பாரதி கண்ணம்மா எபிசோடு!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி ஹேமாவை காணாமல் மனமுடைந்து போய்விடுகிறார். மேலும் தன் அப்பா என்றே தெரியாமல் பாரதிக்கு ஆதரவாக இருக்கும் லக்ஷ்மியின் பாசம் கண்கலங்க வைத்துள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மாவில் எதிர்பாராத விதமாக பல திருப்பங்கள் நடந்து வருகிறது. ஹேமா எப்படியோ ரவுடிகள் கண்ணில் மண்ணை தூவி தப்பித்து சென்றாலும் எங்கு செல்வது என்று தெரியாமல் முழித்து கொண்டுள்ளார். ஒரு பக்கம் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஹேமாவை தேடிக்கொண்டிருக்க பாரதி அருகில் நெருங்கி விட்டார்.

ஆனாலும் ரௌடிகள் அந்த இடத்தில் வந்த சமயம் ஹேமாவால் வாய் திறக்க முடியவில்லை. கண்ணம்மாவும் இந்த பக்கம் ஹேமாவை தேடிக்கொண்டுள்ளார். எப்படியும் கண்ணம்மா தான் ஹேமாவை கண்டுபிடிக்க போகிறார். ஆனாலும் பலருக்கும் ஹேமாவின் நிலை என்னாகுமோ என்ற பதட்டம் இருந்து கொண்டே தான் உள்ளது.

வீட்டிற்கு வரும் பாரதி ஹேமாவை காணாமல் தவித்து கொண்டுள்ளார். மேலும் கண்ணம்மாவை எதற்காக வெளியில் எடுத்தீர்கள் என்று சண்டை போட்டுகொண்டுள்ளார். வீட்டில் உள்ளவர்களும் இந்த பிரச்னையை எப்படி சமாளிக்க போகிறோம் என்ற வருத்தத்தில் உள்ளனர்.

இந்நிலையில் லட்சுமி பாரதியின் நிலையை பார்த்து ஆறுதல் கூறுகிறார். தன் மகள் என்றே தெரியாமல் லக்ஷ்மியின் அரவணைப்பு அவரை கண்கலங்க செய்கிறது. மேலும் பாரதியின் கண்ணீரையும் துடிக்கிறார். அந்த சீன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here