உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களின் ரமலான் பண்டிகைக்கு தயாராகும் விதமாக, கடந்த மாதம் முதல் கடுமையான நோன்பினை கடைபிடித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை உள்ள நோன்பு காலங்களில் சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை உணவு, தண்ணீர் இல்லாமல் இருப்பார்கள். இந்த பண்டிகை பிறை அடிப்படையில் பின்பற்றப்படும் என்பதால், நேற்று (ஏப்ரல் 9) வானில் பிறை தென்படவில்லை எனக்கூறப்படுகிறது.
இதையடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 11 ( நாளை) ரம்ஜான் பண்டிகையை கொண்டாடலாம் என தலைமை காஜி அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
2024ஆம் ஆண்டின் டெட் தேர்வுக்கு தயாராகுறீங்களா? மாஸ் அப்டேட்., வாங்கி பயனடையுங்கள்!!!