வாகனங்களில் இந்த உரிமம் இல்லாமல் இதை கொண்டு செல்ல கூடாது.., சுங்கச்சாவடிகளுக்கு பறந்த உத்தரவு!!

0
தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு மாடுகளை கொண்டு செல்வதற்கு கட்டாயம் விலங்குகள் நல வாரியத்தின் சான்றிதழ் இல்லாமல் கொண்டு செல்லக் கூடாது என்ற உத்தரவு ஏற்கனவே அமலில் உள்ளது. ஆனால் இந்த உத்தரவையும் மீறி ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மாடுகள் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக புகார்கள் வந்துள்ளது. இது போன்று தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தால் அடுத்த மூன்று வருடத்தில் மாடுகள் இனங்களே இல்லாத நிலை உருவாகும் என விலங்குகள் நல வாரியம் எச்சரித்துள்ளது.
இதனால் இனி வரும் அனைத்து நாட்களிலும் சுங்கச்சாவடிகளில் மாடுகள் விலங்குகள் நல வாரியத்தின். சான்றிதழ் இல்லாமல் அண்டை மாநிலத்திற்கு செல்கிறதா என்பதை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளனர் மேலும் இந்த சான்றிதழ் இல்லாமல் மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here