ரம்ஜான் பண்டிகை: சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

0

சென்னையில் மிக முக்கிய போக்குவரத்தாக பார்க்கப்படும் புறநகர் (மின்சார) ரயில் சேவை மூலம் அனுதினமும் பல்லாயிரக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நாளை (ஏப்ரல் 11) ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


ஐபிஎல் 2024: MI vs RCB போட்டியில் மழைக்கு வாய்ப்பா?? வெளியான வானிலை ரிப்போர்ட்!!

இதனை கருத்தில் கொண்டு நாளை (வியாழக்கிழமை) ஞாயிறு கால அட்டவணையில் மின்சார ரயில் சேவை வழங்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதேபோல் பயணிகளின் முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை (ஞாயிறு கால அட்டவணைப்படி) பகுதி நேரம் மட்டுமே செயல்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here