தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தலை போல் இல்லாமல், இனி நடைபெற உள்ள தேர்தல்களில் 100 சதவீத வாக்குப்பதிவு இருக்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் வாக்காளர்கள் பலரும் வேலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு இடம் பெயர்ந்து உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்கள் ஓட்டு போடுவதற்கு எதுவாக, மக்களவை தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதியன்று, பொதுமக்கள் நகர பேருந்துகளில் இலவசமாக சென்று வர அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களிடம் தேர்தல் கமிஷனர் ஆலோசிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
TNUSRB தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களா? இந்த புக் மெட்டீரியல் இருக்கா? மிஸ் பண்ணிடாதீங்க!!!