பிரபல சின்னத்திரை நடிகையான ரக்ஷிதா மஹாலக்ஷ்மி இப்பொழுது சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து வருகிறார். பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி போன்ற வெற்றி சீரியல்களில் நடித்து முன்னணி இடத்தை பிடித்திருந்தார். ரக்ஷிதாவிற்கு பலோவ்ர்ஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் சென்றனர்.
அவருக்கு இந்த அளவிற்கு பெயர் கொடுத்த சீரியல் என்றால் சரவணன் மீனாட்சி தான். ஜில்லு, வேட்டு ஜோடி தான் அப்பொழுது இணையத்தில் ட்ரெண்டிங்கானது. அதன் பிறகு ரக்ஷிதாவிற்கும் வயசு ஏற மவுசு குறைய ஆரம்பித்தது. மேலும் நன்றாக போய்க்கொண்டிருந்த ரக்ஷிதா வாழ்க்கையில் விவாகரத்து என்ற பூகம்பம் விழ ஆரம்பித்தது.
ரக்ஷிதாவும் அவரது கணவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியானது. அதன் பிறகு நடிகர் தினேஷ் இந்த பிரிவு கொஞ்ச நாளைக்கு தான் எல்லாமே மாறும் என்று சொல்லி இருந்தார். ரக்ஷிதாவும் வழக்கம் போல சீரியல்களில் நடித்து கொண்டு தான் உள்ளார்.
இந்நிலையில் ரக்ஷிதா தனது அம்மா அப்பாவுடன் இருக்கும் அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. குடும்பம் மொத்தமும் ஒரே ஜாடையில் இருக்கீங்களே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.