நடிகர் ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள ஜெயிலர் திரைப்படம் குறித்த, முக்கிய கண்டிசன்களை சூப்பர் ஸ்டார் இயக்குனர் நெல்சனிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் அதிரடி:
நடிகர் ரஜினி, தனது அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய், சிவகார்த்திகேயன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், பீஸ்ட் படத்தை சொதப்பிய நெல்சனுக்கு ஜெயிலர் படத்தில் ரஜினி வாய்ப்பு கொடுப்பாரா? என பலரும் கேட்டு வந்தனர்.
ஆனால், இந்த படத்தை நெல்சன் தான் இயக்குவார் அதிரடியாக அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், ரஜினி இயக்குனரை அழைத்து ஜெயிலர் குறித்து முக்கிய கண்டிஷன்களை பிறப்பித்துள்ளார்.
அதாவது, தனது முத்து, அருணாச்சலம், படையப்பா உள்ளிட்ட படங்களை போன்று ஒரு மேஜிக் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்றும், தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப இந்த படம் அமைய வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த நெல்சன் படத்தின் கதைகளை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் விரைவில் ஷூட்டிங் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்